search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் மாற்றம் கொண்டு வர சிறப்பு மாநில அந்தஸ்து தேவை: சபாநாயகர் பேச்சு
    X

    புதுவையில் மாற்றம் கொண்டு வர சிறப்பு மாநில அந்தஸ்து தேவை: சபாநாயகர் பேச்சு

    புதுவையில் மாற்றம் கொண்டு வருவதற்காகவே சிறப்பு மாநில அந்தஸ்து தேவை என்று சபாநாயகர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை எழுத்தாளர் புத்தக சங்கம் சார்பில் 2-வது பன்னாட்டு புத்தகக் கண்காட்சி 22-ந் தேதி தொடங்கி 31-ந் தேதி வரை வேல்.சொக்கநாதன் திருமண நிலையத்தில் நடக்கிறது.

    பன்னாட்டு புத்தக கண்காட்சியை சபாநாயகர் வைத்திலிங்கம் பார்வையிட்டார். பின்னர் முன்னாள் எம்.பி. ராமதாசுக்கு புத்தக சேவா விருதினை வழங்கி பேசினார்.

    புதுவையில் போதிய நிதி இல்லை. இதனால் தான் மாநில அந்தஸ்து வேண்டாம். சிறப்பு மாநில அந்தஸ்து தேவை என கேட்கிறோம். அதிகார போட்டியில் எதை செய்தாலும் தடை வருகிறது. இந்த தடையை நீக்க வழி தெரியவில்லை.

    கவர்னர் முதல்-அமைச்சர் இடையே மோதல் என்றால் யாராவது பஞ்சாயத்து செய்து தீர்க்க வேண்டும். அப்படி பஞ்சாயத்து செய்யும் அமைப்பே இல்லை. இதனால் தலைமேல் கத்தி தொங்குகிறது. இதற்கு மாற்றம் கொண்டு வர சிறப்பு மாநில அந்தஸ்து தேவை.

    இவ்வாறு சபாநாயகர் வைத்திலிங்கம் பேசினார்.
    Next Story
    ×