search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடற்கரை சாலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
    X

    கடற்கரை சாலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

    கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி புதுவைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
    புதுச்சேரி:

    கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி புதுவைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

    அரையாண்டு விடுமுறையும் விடப்பட்டிருப்பதால் தமிழகம், அண்டை மாநிலங்களை சேர்ந்த பயணிகள் அதிகளவில் புதுவைக்கு வந்துள்ளனர்.

    இதனால் புதுவை கடற்கரை சாலையில் காலை முதல் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்திருந்தனர். கடற்கரை சாலையை ஒட்டியுள்ள பாரதி பூங்கா, அருங்காட்சியகம் ஆகியவற்றிலும் சுற்றுலா பயணிகளை காண முடிந்தது. நோணாங்குப்பம் படகு முகாமில் சுற்றுலா பயணிகள் படகு சவாரிக்காக குவிந்தனர். நீண்ட வரிசையில் படகிற்காக காத்திருந்தனர்.

    இதேபோல ஊசுடு ஏரியிலும் படகு பயணம் செய்ய பயணிகள் ஆர்வம் காட்டினர். புத்தாண்டு வரை சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தபடியே இருக்கும்.
    Next Story
    ×