search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பண்ருட்டி அருகே கல்லூரி மாணவி மாயம்
    X

    பண்ருட்டி அருகே கல்லூரி மாணவி மாயம்

    பண்ருட்டி அருகே கல்லூரிக்கு சென்ற மாணவி வீடு திரும்பாததால் இவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.

    பண்ருட்டி:

    பண்ருட்டி அருகே உள்ள ஏ.ஆண்டிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் துரைக்கண்ணு. இவரது மகள் நித்யா (19) இவர் கடலூரில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரி ஒன்றில் இறுதி ஆண்டு படித்து வருகிறார்.

    இவர் கடந்த 14-ந் தேதிகல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இவரை பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்காததால் இவரது தந்தை துரைக்கண்ணு காடாம்புலியூர் போலீசில் புகார் கொடுத்தார்.

    இது குறித்து காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் குமாரய்யா வழக்கு பதிவு செய்து காணாமல் போன கல்லூரி மாணவி கடத்தப்பட்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×