search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவகங்கையில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 4 வாலிபர்கள் கைது
    X

    சிவகங்கையில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 4 வாலிபர்கள் கைது

    சிவகங்கையில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 4 வாலிபரை போலீசார் கைது செய்தனர். இதில் முக்கிய குற்றவாளி விக்கி என்ற விக்னேஷ் என்பவனை போலீசார் தேடி வருகின்றனர்.
    சிவகங்கை:

    சிவகங்கையில் தொடர் கொள்ளைகள் நடந்து வருகின்றன. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் 4 இடங்களில் கொள்ளையில் ஈடுபட்டது ஒரே கும்பல் என தெரியவந்தது.

    இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் உத்தரவின் பேரில் ஆய்வாளர் மோகன் மற்றும் சார்பு ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையில் காவலர் சிலம்பரசன் உட்பட 10 பேர் கொண்ட தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த கலைகுளம் தேவராஜ் மகன் தினேஷ்குமார் (25). சென்னை அறிவழகன் மகன் பாலா என்ற யுவராஜ் (22), வீரகுமார் மகன் ராஜ்குமார் ஆகிய 3 பேரிடமும் விசாரணை நடத்தினர்.

    இந்த விசாரணையில் அவர்கள் சிவகங்கையில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

    மற்றொரு கொள்ளை வழக்கில் தொடர்புடைய பிரபாகரன் என்பவனை இரண்டு நாட்களுக்கு முன் வேறு ஒரு வழக்கில் போலீசார் கைது செய்தனர்.

    இவர்கள் 4 பேரிடமும் 25 பவுன் நகை, பணம், எல்.இ.டி டிவி, டுவீலர், லேப்டாப் உள்ளிட்டவை பறிமுதல் செய்துள்ளனர். இதில் முக்கிய குற்றவாளி விக்கி என்ற விக்னேஷ் என்பவனை போலீசார் தேடி வருகின்றனர்.

    கொள்ளையர்களை கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் பாராட்டினார்.
    Next Story
    ×