என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குஜராத்தில் காங்கிரசுக்குதான் உண்மையான வெற்றி: இளங்கோவன்
Byமாலை மலர்20 Dec 2017 5:40 AM GMT (Updated: 20 Dec 2017 5:40 AM GMT)
குஜராத் தேர்தலை பொறுத்தவரை உண்மையான வெற்றி காங்கிரசுக்கு தான்.பாரதிய ஜனதா மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது என்று இளங்கோவன் கூறினார்.
ஈரோடு:
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவி.கே.எஸ்.இளங்கோவன் ஈரோட்டில் மாலைமலர் நிருபருக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
குஜராத் தேர்தலை பொறுத்தவரை உண்மையான வெற்றி காங்கிரசுக்கு தான்.பாரதிய ஜனதா மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது.
குஜராத் தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்று உள்ளது. மேலும் 20 தொகுதிகளில் 1000 ஓட்டுகள் வித்தியாசத்தில் தான் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது.
காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்றது முதல் இளைஞர்களையும், கிராமபுற மக்களையும் கவர்ந்துள்ளார் அனைத்து தரப்பு மக்களையும் அவர் அரவணைத்து செல்லும் வீதம் அனைவரையும் ஈர்த்து உள்ளது.
மேலும் நடந்து முடிந்த குஜராத் தேர்தலில் கிராமபுற மக்கள் அதிகளவில் காங்கிரஸ் கட்சிக்கு தான் ஓட்டு போட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மோடி வருகை தந்து புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தது காலம் கடந்த முடிவு. அவர் வருகை வெறும் கண்துடைப்பு.
மீனவர்களுக்கு என்று தனி அமைச்சகம் அமைக்கப்படும் என்று தேர்தலின் போது வாக்குறுதி பா.ஜ.க. அளித்தது. ஆனால் இன்று வரை அது வெறும் வாக்குறுதியாகவே உள்ளது.
மீனவர்களுக்கு அவர் ஒன்றும் செய்ய போவதில்லை. தமிழக மக்களை ஏமாற்றும் வேலையில் தான் அவர் ஈடுபட்டு உள்ளார். அவர் என்னதான் ஸ்டண்ட் அடித்தாலும், நாடகம் நடத்தினாலும் தமிழ்நாட்டில் பா.ஜனதா காலூன்ற முடியாது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பா.ஜ.க.டெபாசிட் இழப்பது உறுதி. தி.மு.க. வெற்றி பெறுவது நிச்சயம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவி.கே.எஸ்.இளங்கோவன் ஈரோட்டில் மாலைமலர் நிருபருக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
குஜராத் தேர்தலை பொறுத்தவரை உண்மையான வெற்றி காங்கிரசுக்கு தான்.பாரதிய ஜனதா மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது.
குஜராத் தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்று உள்ளது. மேலும் 20 தொகுதிகளில் 1000 ஓட்டுகள் வித்தியாசத்தில் தான் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது.
காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்றது முதல் இளைஞர்களையும், கிராமபுற மக்களையும் கவர்ந்துள்ளார் அனைத்து தரப்பு மக்களையும் அவர் அரவணைத்து செல்லும் வீதம் அனைவரையும் ஈர்த்து உள்ளது.
மேலும் நடந்து முடிந்த குஜராத் தேர்தலில் கிராமபுற மக்கள் அதிகளவில் காங்கிரஸ் கட்சிக்கு தான் ஓட்டு போட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மோடி வருகை தந்து புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தது காலம் கடந்த முடிவு. அவர் வருகை வெறும் கண்துடைப்பு.
மீனவர்களுக்கு என்று தனி அமைச்சகம் அமைக்கப்படும் என்று தேர்தலின் போது வாக்குறுதி பா.ஜ.க. அளித்தது. ஆனால் இன்று வரை அது வெறும் வாக்குறுதியாகவே உள்ளது.
மீனவர்களுக்கு அவர் ஒன்றும் செய்ய போவதில்லை. தமிழக மக்களை ஏமாற்றும் வேலையில் தான் அவர் ஈடுபட்டு உள்ளார். அவர் என்னதான் ஸ்டண்ட் அடித்தாலும், நாடகம் நடத்தினாலும் தமிழ்நாட்டில் பா.ஜனதா காலூன்ற முடியாது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பா.ஜ.க.டெபாசிட் இழப்பது உறுதி. தி.மு.க. வெற்றி பெறுவது நிச்சயம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X