என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ராகுல்காந்தி பார்வையிட்டதால் மோடியும் வருகிறார்: திருநாவுக்கரசர்
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கி புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட பிரதமர் மோடி இன்றுதான் வந்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உடனடியாக சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். அதனால் தான் மோடியும் வருகிறார். இது தாமதமான வருகை. கண்டனத்துக்குரியது.
தாமதமாக வந்தாலும் கன்னியாகுமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும். முதற்கட்ட நிவாரணமாக மத்திய அரசு ரூ.1000 கோடி வழங்க வேண்டும்.
கடலில் காணாமல் போன மீனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடக்க வேண்டும். இதற்குமுன்பு காணாமல் போனவர்களை 7 வருடம் கழித்துதான் இறந்ததாக கருதி நிவாரணம் வழங்கப்பட்டது. அதை தற்போது 2 வருடமாக குறைத்து இருக்கிறார்கள். ஒக்கி புயலில் காணாமல் போன மீனவர்களுக்கு இதில் சிறப்பு சலுகை வழங்கி விரைவில் நிவாரண நிதி வழங்க வேண்டும்.
இறந்துபோன மீனவர்கள் குடும்பத்துக்கு அரசு ரூ.20 லட்சம் நிவாரண நிதியும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் அறிவித்துள்ளது. அதேபோல் உள்நாட்டில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரணமும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்.
விவசாயிகள் பாதிப்புக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்