search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 2 வயது ஆண் குழந்தை பலி
    X

    தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 2 வயது ஆண் குழந்தை பலி

    கோவை அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 2 வயது ஆண் குழந்தை இறந்தது.

    கோவை:

    கோவை மாவட்டம் சோமனூர் அருகே உள்ள கல்லபாளையம் பாரதி நகரை சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி ரேவதி. இவர்கள் இருவரும் தறிகூடத்தில் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இவர்களுக்கு ராகுல் (5), கமலேஷ் (2) ஆகிய 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர்களில் கமலேஷ் நேற்று இரவு வீட்டு முன் விளையாடி கொண்டிருந்தான்.

    அப்போது அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தான். சிறிது நேரம் கழித்து குழந்தையை தேடி வந்த பெற்றோர் தண்ணீர் தொட்டியில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.குழந்தையை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்று இரவு 11 மணிக்கு குழந்தை பரிதாபமாக இறந்தது. இது குறித்து மங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×