search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு
    X

    ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு

    ஜெயங்கொண்டம் நகராட்சி அரசு மருத்துவமனையில் மாவட்ட கலெக்டர் லட்சுமி பிரியா ஆய்வு செய்தார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சி, அரசு மருத்துவமனையில் மாவட்ட கலெக்டர் லட்சுமி பிரியா ஆய்வு செய்தார். ஆய்வின் போது மருத்துவ மனையில் பணிபுரியும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் அனைவருடைய வருகைப்பதிவேடுகள் மற்றும் அனைத்து பதி வேடுகளை ஆய்வு மேற் கொண்டார். மகப்பேறு சிறப்பு சிகிச்சை பிரிவினை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர் மகப்பேறுக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கும் கர்ப்பிணிப்பெண்களிடம் முறையான தடுப்பூசிகள் உங்கள் பகுதியில் உள்ள கிராம செவிலியர்களால் அளிக்கப்பட்டதா என கேட்டறிந்து அதற்கான மருத்துவ அட்டையினை ஆய்வு மேற் கொண்டார். 

    பின்னர், மருத்துவமனை யில் உள்ள அனைத்து வார்டு களையும் பார்வையிட்டு மருத்துவமனை தூய்மையாக பராமரித்திடவும் பொதுமக்களும் மருத்துவமனையை சுகாதாரமாக பயன்படுத்திட அறிவுறுத்தினார்.

    டெங்கு காய்ச்சல் தொடர்பான சிறப்பு சிகிச்சை வார்டை பார்வையிட்டு காய்ச்சல் தொடர்பாக வரும் நோயாளிகளிடம் உடனுக்குடன் சிகிச்சை மேற்கொண்டு டெங்கு இல்லா மாவட்டமாக உருவாக்கிட மருத்துவத்துறை மற்றும் இதர துறையினரும் சிறப்புடன் பணியினை மேற்கொள்ளுமாறு ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் லட்சுமி பிரியா தெரிவித்தார்.

    இந்த ஆய்வின்போது, உடையார்பாளையம் கோட்டாட்சியர் டினாகுமாரி மற்றும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் உடனிருந்தனர்.
    Next Story
    ×