search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல்காந்தி பதவி ஏற்பு: ஈரோட்டில் காங்கிரசார் கொண்டாட்டம்
    X

    ராகுல்காந்தி பதவி ஏற்பு: ஈரோட்டில் காங்கிரசார் கொண்டாட்டம்

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இன்று ராகுல்காந்தி பொறுப்பேற்று கொண்டார். இதனை காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

    ஈரோடு:

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இன்று ராகுல்காந்தி பொறுப்பேற்று கொண்டார். இதனை காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

    ஈரோடு மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

    ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் பன்னீர் செல்வம் பார்க்கில் மாநகர் மாவட்ட தலைவர் ஈ.பி.ரவி தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மண்டல தலைவர்கள் திருச் செல்வம், ஆயுப் அலி, ஜாபர் சாதிக், விவேகானந்தன், பொதுச்செயலாளர் கண்ணப்பன், சிவாஜி கணேசன், சிறுபான்மை பிரிவு தலைவர் சுரேஷ், நிர்வாகிகள் முகமது அர்‌ஷத், கே.என்.பாஷா, மகிளா காங்கிரஸ் தலைவி புவனேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் தலைமையில் ஈரோடு ரங்கம்பாளையம் கலைக் கல்லூரி அருகே இருந்து காங்கிரசார் பைக் பேரணி புறப்பட்டனர். பேரணி சென்னிமலை ரோடு வழியாக காளை மாட்டு சிலை வந்தது.

    அங்கு பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கப்பட்டது. மணல்மேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் கொடியை மக்கள் ராஜன் ஏற்றி வைத்தார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம்.பழனிசாமி, வட்டார காங்கிரஸ் தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல பு.புளியம் பஸ் நிலையம் முன்பு மாநில காங்கிரஸ் செயற் குழு உறுப்பினர் எல்.முத்துகுமார் தலைமையில் காங்கிரசார் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர்.

    இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் இல்லியாஸ் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×