என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வெம்பாக்கம் அருகே இளம்பெண் தற்கொலை
வெம்பாக்கம்:
வெம்பாக்கம் அடுத்த பில்லான்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகள் ஜெயந்தி (வயது 27). இவருக்கு குன்னவாக்கம் பகுதியை சேர்ந்த பாஸ்கர் என்பவருடன் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. 2 ஆண் குழந்தைகள் உள்ளன.
இந்நிலையில் ஜெயந்திக்கும் திருத்தணியை சேர்ந்த வேலு என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டு கணவர் பாஸ்கரை பிரிந்து வேலுவுடன் 4 ஆண்டுகளாக வாழ்ந்து வந்துள்ளார்.
2 மாதங்களாக வேலுவுக்கும் ஜெயந்திக்கும் சண்டை ஏற்பட்டு ஜெயந்தி தனது தாய்வீட்டில் வந்து தங்கியிருந்தார்.
நேற்று மாலை ஜெயந்தியை அழைத்து செல்ல வேலு வந்தார். அப்போது அவருடன் வர விருப்பம் இல்லை என்று கூறியுள்ளார்.
இதனால் வேலு அருகில் இருந்த கிணற்றில் குதித்தார் அக்கம் பக்கத்தினர் வேலுவை மீட்டனர். ஜெயந்தியின் தாய் சாந்தி உன்னால் எனக்கு அவமானம் என்று கூறி திட்டியுள்ளார்.
இதனால் மனமுடைந்த ஜெயந்தி வீட்டில் இருந்த மண்எண்னை ஊற்றி தீ வைத்து கொண்டார்.அங்கிருந்தவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது ஜெயந்தி உடல் கருகி இறந்து கிடந்தார்.
இது குறித்து தூசி போலீஸ் நிலையத்தில் தகவல் அளிக்கபட்டது. இன்ஸ்பெக்டர் சாரதி மற்றும் போலீசார் உடலை மீட்டு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்