search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாலாஜாவில் இளம்பெண் தற்கொலை
    X

    வாலாஜாவில் இளம்பெண் தற்கொலை

    வாலாஜாவில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாலாஜா:

    வாலாஜா சொர்ணசெட்டி தெருவை சேர்ந்தவர் வேணுகோபால் கூலித் தொழிலாளி. இவரது மனைவி ரேவதி (வயது28). இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டாகிறது.

    ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சில தினங்களாக ரேவதி உடல் நலம் பாதிப்பட்ட நிலையில் இருந்தார்.மேலும் வீட்டில் கடன் தொல்லை அதிகரித்து இருந்தது. இதனால் மனமுடைந்த ரேவதி தனது வீட்டில் மேற்கூரையில் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வேணுகோபால் அதை பார்த்து அழுது துடித்தார். அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்து வாலாஜா போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    அங்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் ரேவதி உடலை மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×