search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏரியில் தவறி விழுந்து கூலி தொழிலாளி பலி
    X

    ஏரியில் தவறி விழுந்து கூலி தொழிலாளி பலி

    ஏரியில் தவறி விழுந்து கூலி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒசூர்:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்த கொடிஹள்ளி கங்கம்மா கோவில் தெருவை சேர்ந்தவர் கெம்பராஜ் (வயது 32). கூலி தொழிலாளி.

    இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த பாகலூர் பகுதிக்கு வந்து இருந்தார். நேற்று இவர் பாகலூரை அடுத்த கொம்ளாபுரம் ஏரிக்கரையில் நடந்து சென்ற போது தவறி ஏரியில் விழுந்து விட்டார். இதில்ஏரியில் மூழ்கி பலியாகி விட்டார். தகவல் அறிந்த பாகலூர் போலீசார் கெம்பராஜ் பிணத்தை கைபப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×