search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் 18-ந் தேதி நடைபெறுவதாக இருந்த பா.ம.க. போராட்டம் ஒத்திவைப்பு: ராமதாஸ்
    X

    சென்னையில் 18-ந் தேதி நடைபெறுவதாக இருந்த பா.ம.க. போராட்டம் ஒத்திவைப்பு: ராமதாஸ்

    கியாஸ் சிலிண்டர் வினியோகத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்டித்து, சென்னையில் 18-ந் தேதி நடக்க இருந்த போராட்டம் தவிர்க்க முடியாத காரணங்களால் ஒத்திவைக்கப்படுவதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் சமையல் கியாஸ் சிலிண்டர்களை வினியோகிக்க கூடுதல் கட்டணம் கேட்டு சமையல் கியாஸ் சிலிண்டர் முகமைகளின் பணியாளர்கள் கொடுக்கும் தொல்லை அதிகரித்து வருவதைக் கண்டித்தும், இதை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் வரும் 18-12-2017 திங்கட்கிழமை அன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் அறப்போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.



    ஆனால், தவிர்க்க முடியாத காரணங்களால் அப்போராட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. எந்த தேதியில் போராட்டம் நடைபெறும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
    Next Story
    ×