என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
முத்துப்பேட்டை அருகே குடும்ப தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த கள்ளிக்குடி கீழத்தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 40) கூலி தொழிலாளி. இவரது மனைவி அம்பிகா ராணி(33), சதீஷ்குமார் தினமும் மதுகுடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்றும் அவர் வேலைக்கு செல்லாததால் அம்பிகா ராணி கணவரை கண்டித்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மனமுடைந்த அம்பிகா ராணி தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீவைத்து கொண்டார். இதில் உடல் கருகிய அவரை மீட்டு திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அம்பிகா ராணி பரிதாபமான இறந்தார். பலியான அவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இதுபற்றிய புகாரின் பேரில் எடையூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மனைவியை தற்கொலைக்கு தூண்டிய சதீஷ்குமாரை கைது செய்தனர். இந்த சம்பவம் கள்ளிக்குடியில் பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்