search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேலூர் அருகே கார் மோதி மூதாட்டி பலி
    X

    மேலூர் அருகே கார் மோதி மூதாட்டி பலி

    மேலூர் அருகே கார் மோதி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலூர்:

    வேளாங்கண்ணியைச் சேர்ந்த 15 பேர் ஒரு வேனில் சபரிமலைக்கு புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் வந்த வேன் மேலூர் அருகே உள்ள தெற்குத்தெருவில் சாப்பிடுவதற்காக இறங்கினர்.

    அப்போது வேளாங்கண்ணியைச் சேர்ந்த சின்னப்பன் மனைவி முத்துலட்சுமி (வயது 65) என்பவர் ரோட்டை கடக்க முயன்றார்.

    அந்த வழியாக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து மேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராம் நாராயணன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    அழகர்கோவில் அருகே உள்ள குருத்தூரைச் சேர்ந்தவர் கரந்தமலை (45)விவசாயி. இவரது மனைவி பிரேமி (40). நேற்றிரவு இருவரும் மோட்டார் சைக்கிளில் மேலூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது பின்னால் வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயம் அடைந்து மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேலூர் போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×