search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
    X

    பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

    சென்னை-கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் உள்ள பொன்னேரி ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் கீழ்க்கண்ட மின்சார ரெயில்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை-கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் உள்ள பொன்னேரி ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் கீழ்க்கண்ட மின்சார ரெயில்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கீழ்க்கண்ட ரெயில்களில் நாளை (சனிக்கிழமை), நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

    * சென்னை மூர்மார்க்கெட்டில் இருந்து காலை 10.25, 11.35, மதியம் 12.20, 1.25 மணிக்கு கும்மிடிப்பூண்டிக்கு செல்லும் மின்சார ரெயில் மீஞ்சூர்-கும்மிடிப்பூண்டி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    * மூர்மார்க்கெட்டில் இருந்து மதியம் 12.40 மணிக்கு சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரெயில் மீஞ்சூர்-சூலூர்பேட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    * கும்மிடிப்பூண்டியில் இருந்து மூர்மார்க்கெட்டுக்கு காலை 11.20 புறப்படும் மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி-மீஞ்சூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    * சூலூர்பேட்டையில் இருந்து மூர்மார்க்கெட்டுக்கு காலை 11.15 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி-மூர்மார்க்கெட் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    * சூலூர்பேட்டையில் இருந்து மூர்மார்க்கெட்டுக்கு மதியம் 1.15 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் சூலூர்பேட்டை-மீஞ்சூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    * திருவள்ளூரில் இருந்து சென்னை கடற்கரை/வேளச்சேரிக்கு மதியம் 1.40 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் ஆவடி-சென்னை கடற்கரை/வேளச்சேரி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    * கடற்கரையில் இருந்து பட்டாபிராமுக்கு மதியம் 1.50 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் வேளச்சேரி/கடற்கரை-ஆவடி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    * கும்மிடிப்பூண்டியில் இருந்து மூர்மார்க்கெட்டுக்கு மதியம் 12.55, 1.35 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

    * கடற்கரையில் இருந்து திருத்தணிக்கு மதியம் 12.10 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரெயில், மூர்மார்க்கெட் ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 12 மணிக்கு புறப்படும்.

    * கடற்கரையில் இருந்து அரக்கோணத்துக்கு மதியம் 2.25 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரெயில், மூர்மார்க்கெட் ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்படும்.

    * கடற்கரையில் இருந்து சூலூர்பேட்டைக்கு மதியம் 2.40 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரெயில், மூர்மார்க்கெட் ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 2.45 மணிக்கு புறப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    Next Story
    ×