என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேன்கனிக்கோட்டையில் வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்14 Dec 2017 5:11 PM GMT (Updated: 14 Dec 2017 5:12 PM GMT)
கிராம ஊழியர்களை பழி வாங்கும் நோக்கத்தில் பணிபுரியும் அதிகாரிகளை கண்டித்து வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தேன்கனிக்கோட்டை,
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகாவில் பணிபுரியும் தாசில்தார் சிவசம்போ, மண்டல துணை தாசில்தார் மாணிக்கவாசகம் ஆகியோரையும், கிராம ஊழியர்களையும் பழி வாங்கும் நோக்கத்தில் பணிபுரியும் அதிகாரிகளை கண்டித்து தேன்கனிக்கோட்டை தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் சூடப்பன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கிருஷ்ணன், துணை செயலாளர் அஜ்மத்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட செயலாளர் முனிமாரப்பன் வரவேற்றார். இதில் வேடியப்பன், ஜார்ஜ், நல்லகவுண்டன், சின்னசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X