search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவகாசியில் திருமணமான சில மாதங்களில் என்ஜினீயர் தற்கொலை
    X

    சிவகாசியில் திருமணமான சில மாதங்களில் என்ஜினீயர் தற்கொலை

    குடும்பத்தகராறு காரணமாக மனவேதனை அடைந்த என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.

    விருதுநகர்:

    சிவகாசி கந்தபுரம் காலனியைச் சேர்ந்தவர் மைக்கேல்ராஜ். இவரது மகன் பிரபாகரன் (வயது30), என்ஜினீயர். ஈரோட்டில் வேலை பார்த்து வந்த இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    அதன் பின்னர் பிரபாகரன் வேலையை விட்டு விட்டார். சிவகாசி திரும்பிய அவர், இங்கு வேலை தேடினார். இதுதொடர்பாக கணவன்-மனைவி இடையே மனக்கசப்பு ஏற்பட்டது.

    இதனால் வாழ்க்கையில் வெறுப் படைந்த பிரபாகரன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.

    இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×