என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாமல்பட்டி அருகே காதல் திருமணம் செய்த புதுப்பெண் தற்கொலை
Byமாலை மலர்13 Dec 2017 5:06 PM GMT (Updated: 13 Dec 2017 5:06 PM GMT)
சாமல்பட்டி அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி அருகே உள்ள சந்தாகவுண்டனூர் கிராமத்தை சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 23). இவரது மனைவி அருள்ஜோதி (20).
இவர்கள் 2 பேரும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு உறவினர்களை பிரிந்து தனியாக ஒரு வீட்டில் இவர்கள் வசித்து வந்தனர். நேற்று கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. மனைவியுடன் சண்டை போட்ட கதிர்வேல் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார்.
வீட்டில் தனியாக இருந்த அருள்ஜோதி பூச்சி கொல்லி மருந்தை எடுத்து குடித்து விட்டார். மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.
இது குறித்து சாமல்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரப்பன் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார். திருமணமான 5 மாதத்தில் அவர் இறந்து போனதால் வரதட்சணை கொடுமைக்காரணமாக அவர் இறந்தாரா? என்பது குறித்து தர்மபுரி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்த உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X