என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாலாஜா அருகே விவசாயி தற்கொலை
Byமாலை மலர்13 Dec 2017 11:11 AM GMT (Updated: 13 Dec 2017 11:11 AM GMT)
வாலாஜா அருகே விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலாஜா:
வாலாஜா அடுத்த பூண்டி களத்துமேட்டு தெருவை சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 60) விவசாயி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை விவசாய நிலத்திற்கு உரம் வாங்க வேண்டுமென வீட்டில் இருந்தவர்களிடம் இருந்து பணம் வாங்கி சென்ற கதிர்வேல் இரவு 11 மணிக்கு குடிபோதையில் வீட்டிற்கு வந்தார்.
அதன் பின்னர் வீட்டில் இருந்தவர்களுக்கு தெரியாமல் மறைத்து வைத்திருந்த விஷத்தை குடித்தார்.
இதனால் கதிர்வேல் வாயில் நுரை தள்ளியுள்ளது. இதனை கண்ட உறவினர்கள் கதிர்வேலை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் கதிர்வேலுவுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது குறித்து வாலாஜா போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X