search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முகவரி கேட்பது போல் நடித்து பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு
    X

    முகவரி கேட்பது போல் நடித்து பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு

    சூலூர் அருகே முகவரி கேட்பது போல் நடித்து பெண்ணிடம் 7 பவுன் நகை பறிக்கப்பட்டது.
    சூலுர்:

    கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பீடம்பள்ளியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி தனலட்சுமி (50). இவர் நேற்று மாலை அப் பகுதியில் உள்ள கடைக்கு பால் வாங்க சென்றார்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் முகவரி கேட்பது நடித்து தனலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டனர். இதே போல் மற்றொரு நகை பறிப்பு சம்பவமும் நடைபெற்ற உள்ளது. சூலூர் அருகே உள்ள பட்டணத்தை சேர்ந்தவர் பவானி. இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று மாலை கல்லூரி முடிந்து கல்லூரி பஸ்சை விட்டு இறங்கி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பவானி அணிந்திருந்த 2 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி சென்றுவிட்டனர். தனலட்சுமியிடம் கைவரிசை காட்டிய மர்ம நபர்கள் தான் பவானியிடமும் நகையை பறித்து சென்று இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    இது குறித்து சூலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×