search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செய்யாறில் பஸ்கள் நேருக்கு நேர் மோதல்: 3 பேர் பலி - 25 பேர் படுகாயம்
    X

    செய்யாறில் பஸ்கள் நேருக்கு நேர் மோதல்: 3 பேர் பலி - 25 பேர் படுகாயம்

    செய்யாறில் பஸ்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 25 பேர் படுகாயம் அடைந்தனர்.
    செய்யாறு:

    வேலூரில் இருந்து திண்டிவனத்திற்கு இன்று காலை அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. செய்யாறு அடுத்த எச்சூர் என்ற இடத்தில் சென்ற போது வந்தவாசியில் இருந்து செய்யாறு வழியாக காஞ்சிபுரம் நோக்கி சென்ற தனியார் பஸ் மீது நேருக்கு நேராக மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் இரண்டு பஸ்களின் முன் பக்கம் நொறுங்கியது. அரசு பஸ் டிரைவர் வந்தவாசியை அடுத்த நடுகுப்பத்தை சேர்ந்த மதியழகன் (53), செய்யாறு அடுத்த பைக்கினர் பகுதியை சேர்ந்த தாமோதரன், (70), அடையாளம் தெரியாத மற்றொருவர் என 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.


    மேலும் 25 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த அனக்காவூர் போலீசார் விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    Next Story
    ×