search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊத்துக்கோட்டை அருகே வாலிபர் மீது தாக்குதல்: 3 பேர் கைது
    X

    ஊத்துக்கோட்டை அருகே வாலிபர் மீது தாக்குதல்: 3 பேர் கைது

    ஊத்துக்கோட்டை அருகே வாலிபரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள சென்னங்காரணி கிராமத்தை சேர்ந்தவர் மணிவண்ணன். தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று மாலை பாலவாக்கத்தில் உள்ள ஒட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தார். அங்கு பனபாக்கம் காலனியை சேர்ந்த கார்த்திக், தமிழரசன், சரவணன் ஆகியோர் வந்தனர்.

    அப்போது நாற்காலியில் உட்காருவது தொடர்பாக அவர்களுக்கும், மணிவண்ணனுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கார்த்திக், தமிழரசன், சரவணன் ஆகியோர் சேர்ந்து பீர் பாட்டிலால் மணிவண்ணணை குத்தினர். படுகாயம் அடைந்த அவருக்கு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர் பரந்தாமன் வழக்குபதிவு செய்து கார்த்திக், தமிழரசன், சரவணன் ஆகியோரை கைது செய்தார்.

    Next Story
    ×