search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒருமுறைக்கு மேல் பதிவு செய்த வாக்காளர்கள் மீது உரிய நடவடிக்கை: ஐகோர்ட் உத்தரவு
    X

    ஒருமுறைக்கு மேல் பதிவு செய்த வாக்காளர்கள் மீது உரிய நடவடிக்கை: ஐகோர்ட் உத்தரவு

    வாக்காளர் பட்டியலில் ஒருமுறைக்கு மேல் பதிவு செய்த வாக்காளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    ஆர்.கே நகர் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்னரே அத்தொகுதியில் போலி வாக்காளர்களை நீக்கி விட்டுதான் தேர்தல் தேதி அறிவிக்க வேண்டும் என தி.மு.க சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இதனையடுத்து, போலி வாக்காளர்களை நீக்க வேண்டும் என தேர்தல் அதிகாரிகளுக்கு கோர்ட் உத்தரவிட்டது.

    45 ஆயிரம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தனர். இந்நிலையில், தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், இன்னும் 5,117 போலி வாக்காளர்கள் தொகுதியில் உள்ளதாக மீண்டும் முறையிடப்பட்டது.

    இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த வழக்கில், வாக்காளர் பட்டியலில் ஒருமுறைக்கு மேல் பதிவு செய்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள 1,947 போலி வாக்காளர்களை நீக்க வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த வழக்கை முடித்து வைத்தனர்.

    Next Story
    ×