search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சூளகிரியில், வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
    X

    சூளகிரியில், வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாசில்தார் மற்றும் மண்டல துணை தாசில்தார் ஆகியோரின் ஊழியர் விரோத போக்கை கண்டித்து, கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    ஓசூர்:

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாசில்தார் சிவசம்போ மற்றும் மண்டல துணை தாசில்தார் மாணிக்க வாசகம் ஆகியோரின் ஊழியர் விரோத போக்கை கண்டித்து, கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    சூளகிரி தாசில்தார் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு வட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் திம்மராயன் வரவேற்று பேசினார். சங்கத்தின் மாவட்ட தலைவர் வெங்கடேசன் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தின் போது, சிவசம்போ மற்றும் மாணிக்கவாசகம் ஆகிய 2 பேரும், ஊழியர் விரோத போக்கை கடைபிடித்து வருவதாக கண்டித்தும், அவர்களை சாதிய வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    முடிவில், வட்ட பொருளாளர் சுகேந்திரன் நன்றி கூறினார்.
    Next Story
    ×