search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உல்லாசத்துக்கு அழைத்து லாரி டிரைவரிடம் பணம் பறித்த பெண்
    X

    உல்லாசத்துக்கு அழைத்து லாரி டிரைவரிடம் பணம் பறித்த பெண்

    லாரியை வழிமறித்து டிரைவரை உல்லாசத்துக்கு அழைத்து பணம் பறித்த பெண் கணவர் மற்றும் உறவினருடன் கைது செய்யப்பட்டார்.
    ஆம்பூர்:

    பெங்களூருவில் இருந்து வேலூர் நோக்கி லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. லாரியை கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் சின்னசாமி (வயது 32) ஓட்டி வந்தார்.

    ஆம்பூர் அருகே மின்னூர் பகுதியில் வந்தபோது சாலையோரம் நின்ற ஒரு பெண் லாரியை நிறுத்துமாறு கை காட்டவே சின்னசாமி லாரியை நிறுத்தினார்.

    கீழே இறங்கிய போது, அந்த பெண் அவரை புதருக்குள் அழைத்துச்சென்றார். உல்லாசமாக இருக்கலாம் என கருதிய அவர் அங்கு சென்றபோது மறைந்து இருந்த 2 பேர் சின்னசாமியை தாக்கி அவரிடம் இருந்த ரூ.5 ஆயிரம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றுவிட்டனர்.

    இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசில் சின்னசாமி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் லாரி டிரைவரை உல்லாசத்துக்கு அழைத்த பெண் வாணியம்பாடியை சேர்ந்த ஆனந்தி (24) என்பதும், பணத்தை பறித்துச் சென்றது அவரது கணவர் ராஜேஷ் (27) மற்றும் அவர்களது உறவினரான மின்னூரை சேர்ந்த சிவக்குமார் (44) என்பதும் தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அந்த 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×