என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிப்ரவரி மாதம் புதுவை கூட்டுறவு வங்கிகளுக்கு தேர்தல்: கவர்னர் கிரண்பேடி
Byமாலை மலர்12 Dec 2017 5:08 AM GMT (Updated: 12 Dec 2017 5:08 AM GMT)
புதுவையில் பிப்ரவரி மாதம் கூட்டுறவு வங்கிகளுக்கு நிர்வாகிகள் தேர்தல் சட்ட விதிகளின்படி நடத்தப்படும் என கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவையில் உள்ள கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து கவர்னர் கிரண்பேடிக்கு பல்வேறு புகார்கள் வந்தது.
இதையடுத்து கவர்னர் கிரண்பேடி கூட்டுறவு வங்கி அதிகாரிகளையும், நபார்டு வங்கி அதிகாரிகளையும் கவர்னர் மாளிகைக்கு அழைத்து ஆய்வு கூட்டத்தை நடத்தினார்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கவர்னர் கிரண்பேடி தனது டுவிட்டரில் வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
புதுவை மாநில கூட்டுறவு வங்கி நிறுவனங்களில் பிப்ரவரி மாதம் முதல் வாரத்துக்கள் சில திட்டங்களை செயல்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பிப்ரவரி மாதம் கூட்டுறவு வங்கிகளுக்கு நிர்வாகிகள் தேர்தல் சட்ட விதிகளின்படி நடத்தப்படும்.
நபார்டு வங்கிகளில் ஆண்டுக்கு 2 முறையாவது மூத்த அதிகாரிகள் கணக்குகளை தணிக்கை செய்ய வேண்டும். மேலும் ஆண்டுக்கு ஒரு முறை திடீரென வங்கிகளை ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வு முடிவுகளை இந்தியன் ரிசர்வ் வங்கி மற்றும் கவர்னர் அலுவலகத்துக்கு அளிக்க வேண்டும்.
வங்கிக்கு தொடர்பு இல்லாதவர்களை நிர்வாகத்தில் தலையிட அனுமதிக்க கூடாது. இதனை வங்கி கிளை மேலாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.
கூட்டுறவு துறை செயலாளரும் அவ்வப்போது வங்கிகளுக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மாற்று பணி இடங்களில் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களை மீண்டும் வங்கியில் பணியாற்ற அனுமதிப்பதை திரும்ப பெற வேண்டும்.
வங்கி கணக்குகளில் அங்கீகாரமற்ற செலவுகளை பதிவு செய்யக்கூடாது. தனி நபரின் அழுத்தம் காரணமாக எவ்வித கடனும் வழங்க கூடாது. விதிமுறைகளை மீறி வங்கிகளில் ஆட்களை நியமிக்க கூடாது. இந்த நடைமுறைகள் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் இருந்து ஆய்வு செய்யப்படும்.
இவ்வாறு கவர்னர் கிரண்பேடி அதில் கூறியுள்ளார்.
புதுவையில் உள்ள கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து கவர்னர் கிரண்பேடிக்கு பல்வேறு புகார்கள் வந்தது.
இதையடுத்து கவர்னர் கிரண்பேடி கூட்டுறவு வங்கி அதிகாரிகளையும், நபார்டு வங்கி அதிகாரிகளையும் கவர்னர் மாளிகைக்கு அழைத்து ஆய்வு கூட்டத்தை நடத்தினார்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கவர்னர் கிரண்பேடி தனது டுவிட்டரில் வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
புதுவை மாநில கூட்டுறவு வங்கி நிறுவனங்களில் பிப்ரவரி மாதம் முதல் வாரத்துக்கள் சில திட்டங்களை செயல்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பிப்ரவரி மாதம் கூட்டுறவு வங்கிகளுக்கு நிர்வாகிகள் தேர்தல் சட்ட விதிகளின்படி நடத்தப்படும்.
நபார்டு வங்கிகளில் ஆண்டுக்கு 2 முறையாவது மூத்த அதிகாரிகள் கணக்குகளை தணிக்கை செய்ய வேண்டும். மேலும் ஆண்டுக்கு ஒரு முறை திடீரென வங்கிகளை ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வு முடிவுகளை இந்தியன் ரிசர்வ் வங்கி மற்றும் கவர்னர் அலுவலகத்துக்கு அளிக்க வேண்டும்.
வங்கிக்கு தொடர்பு இல்லாதவர்களை நிர்வாகத்தில் தலையிட அனுமதிக்க கூடாது. இதனை வங்கி கிளை மேலாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.
கூட்டுறவு துறை செயலாளரும் அவ்வப்போது வங்கிகளுக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மாற்று பணி இடங்களில் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களை மீண்டும் வங்கியில் பணியாற்ற அனுமதிப்பதை திரும்ப பெற வேண்டும்.
வங்கி கணக்குகளில் அங்கீகாரமற்ற செலவுகளை பதிவு செய்யக்கூடாது. தனி நபரின் அழுத்தம் காரணமாக எவ்வித கடனும் வழங்க கூடாது. விதிமுறைகளை மீறி வங்கிகளில் ஆட்களை நியமிக்க கூடாது. இந்த நடைமுறைகள் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் இருந்து ஆய்வு செய்யப்படும்.
இவ்வாறு கவர்னர் கிரண்பேடி அதில் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X