என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வங்கி கடன் தொல்லையால் தனியார் ஊழியர் தற்கொலை
Byமாலை மலர்11 Dec 2017 10:26 AM GMT (Updated: 11 Dec 2017 10:26 AM GMT)
வங்கிகளில் ‘கிரெடிட்கார்டு’ மூலம் பெற்ற கடன் தொல்லையால் தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெரம்பூர்:
பெரம்பூர் ஈ.எஸ்.ஐ. மருத்துவமனை தெருவை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 36). இவருக்கு திருமணம் ஆகி 7 வருடங்கள் ஆகிறது.
தனியார் நிறுவனத்தில் ரூ.30 ஆயிரம் சம்பளத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். 3 வருடங்களுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்றுவிட்டார்.
அதன்பிறகு தனியாக வசித்து வந்த அருண்குமார் பணத்தை ஆடம்பரம்பரமாக செலவு செய்து வந்தார். 4 பிரபல வங்கிகளிடம் இருந்து கிரெடிட் கார்டுகள் பெற்று கடன் வாங்கி செலவு செய்தார்.
கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் திணறினார். கடனை திருப்பிச் செலுத்த கோரி வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. வங்கிகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தவித்தார்.
இதனால் மனம் உடைந்த அருண்குமார் நேற்று மாலை வீட்டுக்குள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் கிடைத்ததும் திரு.வி.க.நகர் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.
வீட்டில் சோதனையிட்டபோது அருண்குமார் எழுதிய கடிதம் சிக்கியது. அதில் கடன் தொல்லை குறித்து அவர் 3 பக்கங்ளில் உருக்கமாக எழுதி இருந்தார்.
பெரம்பூர் ஈ.எஸ்.ஐ. மருத்துவமனை தெருவை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 36). இவருக்கு திருமணம் ஆகி 7 வருடங்கள் ஆகிறது.
தனியார் நிறுவனத்தில் ரூ.30 ஆயிரம் சம்பளத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். 3 வருடங்களுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்றுவிட்டார்.
அதன்பிறகு தனியாக வசித்து வந்த அருண்குமார் பணத்தை ஆடம்பரம்பரமாக செலவு செய்து வந்தார். 4 பிரபல வங்கிகளிடம் இருந்து கிரெடிட் கார்டுகள் பெற்று கடன் வாங்கி செலவு செய்தார்.
கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் திணறினார். கடனை திருப்பிச் செலுத்த கோரி வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. வங்கிகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தவித்தார்.
இதனால் மனம் உடைந்த அருண்குமார் நேற்று மாலை வீட்டுக்குள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் கிடைத்ததும் திரு.வி.க.நகர் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.
வீட்டில் சோதனையிட்டபோது அருண்குமார் எழுதிய கடிதம் சிக்கியது. அதில் கடன் தொல்லை குறித்து அவர் 3 பக்கங்ளில் உருக்கமாக எழுதி இருந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X