என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லாரி மீது கார் மோதல்: குன்னூர் தனியார் வங்கி மேலாளர் பலி
Byமாலை மலர்11 Dec 2017 7:47 AM GMT (Updated: 11 Dec 2017 7:47 AM GMT)
குன்னூர் தனியார் வங்கி மேலாளர் காரில் சென்று கொண்டிருந்தபோது லாரி மீது மோதிய விபத்தில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
வெள்ளக்கோவில்:
திருச்சியை சேர்ந்தவர் ஓம் குமார் (39). இவர் குன்னூரில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்தார். சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் இவர் ஊருக்கு வருவது வழக்கம். இது போல் நேற்று முன்தினம் திருச்சி சென்று இருந்தார். இன்று பணிக்கு செல்வதற்காக அவர் காரில் புறப்பட்டார்.
காரை அவரே ஓட்டி வந்தார். இந்த கார் இன்று அதிகாலை 5 மணியளவில் கரூர்- கோவை சாலையில் வெள்ளக்கோவில் அருகே உள்ள ஓலப்பாளையம் பகுதியில் வந்து கொண்டிருந்தது.
அப்போது முன்னால் சிமெண்ட் லோடு ஏற்றிய லாரி சென்றது. அதன் மீது கார் மோதியது. இதில் காரின் முன் பகுதி பலத்த சேதம் அடைந்தது. காரை ஓட்டி வந்த வங்கி மேலாளர் ஓம் குமார் உடல் நசுங்கி சம்பவ இடத்திலே இறந்தார்.
இது குறித்து வெள்ளக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சியை சேர்ந்தவர் ஓம் குமார் (39). இவர் குன்னூரில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்தார். சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் இவர் ஊருக்கு வருவது வழக்கம். இது போல் நேற்று முன்தினம் திருச்சி சென்று இருந்தார். இன்று பணிக்கு செல்வதற்காக அவர் காரில் புறப்பட்டார்.
காரை அவரே ஓட்டி வந்தார். இந்த கார் இன்று அதிகாலை 5 மணியளவில் கரூர்- கோவை சாலையில் வெள்ளக்கோவில் அருகே உள்ள ஓலப்பாளையம் பகுதியில் வந்து கொண்டிருந்தது.
அப்போது முன்னால் சிமெண்ட் லோடு ஏற்றிய லாரி சென்றது. அதன் மீது கார் மோதியது. இதில் காரின் முன் பகுதி பலத்த சேதம் அடைந்தது. காரை ஓட்டி வந்த வங்கி மேலாளர் ஓம் குமார் உடல் நசுங்கி சம்பவ இடத்திலே இறந்தார்.
இது குறித்து வெள்ளக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X