search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
    X

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை குறைந்து பனிப்பொழிவு தொடங்கி உள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.
    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை குறைந்து பனிப்பொழிவு தொடங்கி உள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.

    நேற்று முன்தினம் வினாடிக்கு 3 ஆயிரத்து 602 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 2 ஆயிரத்து 815 கனஅடியாக குறைந்தது. நீர்வரத்து குறைந்துள்ள நிலையில், அணையில் இருந்து பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    நீர்வரத்து குறைந்திருந்தாலும், தண்ணீர் திறப்பைவிட அதிகமாவே உள்ளதால் அணையின் நீர்மட்டம் மெதுவாக உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 78.89 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 79.08 அடியாக உயர்ந்துள்ளது.
    Next Story
    ×