search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோட்டில் மின்சாரம் தாக்கி பிரிண்டிங் பட்டறை தொழிலாளி பலி
    X

    ஈரோட்டில் மின்சாரம் தாக்கி பிரிண்டிங் பட்டறை தொழிலாளி பலி

    ஈரோட்டில் மின்சாரம் தாக்கி பிரிண்டிங் பட்டறை தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு, கனிராவுத்தர் குளம், காந்தி நகரை சேர்ந்தவர் சவுந்தரராஜன் (வயது 27). இவரது மனைவி கவுசல்யா. இவர்களுக்கு 8 மாத பெண் குழந்தை உள்ளது.

    கவுந்தரராஜன் ஈரோட்டில் உள்ள பிரிண்டிங் பட்டறையில் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு வேலை பார்த்து கொண்டிருந்த போது சுவிட்சை ஆன் செய்தார்.

    அப்போது சவுந்தரராஜனை மின்சாரம் தாக்கியது. இதனால் வேலை பார்த்து கொண்டிருந்த மற்ற தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சவுந்தரராஜனை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதனை செய்த டாக்டர் சவுந்தரராஜன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சவுந்தரராஜன் உடலை பிரேதபரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×