என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருக்காட்டுப்பள்ளி அருகே தேர்வு சரியாக எழுதாததால் கல்லூரி மாணவி தற்கொலை
Byமாலை மலர்8 Dec 2017 10:20 AM GMT (Updated: 8 Dec 2017 10:21 AM GMT)
தேர்வில் மதிப்பெண் குறைந்து விடும் என்று கல்லூரி மாணவி தற்கொலை செய்த சம்பவம் திருக்காட்டுப்பள்ளி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பூதலூர்:
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை அடுத்துள்ள இளங்காடு மேலத்தெருவை சேர்ந்த செந்தமிழ்செல்வன் என்பவர் மகள் மகாராணி (வயது 17). இவர் தனியார் கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு படித்து வந்தார்.
அவர் சமீபத்தில் நடந்த செமஸ்டர் தேர்வை சரியாக எழுதவில்லை. எனவே மதிப்பெண் குறைவாக கிடைக்கும் என்று கவலையில் இருந்து வந்தார். இதில் மனமுடைந்த அவர் நேற்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். மயங்கி விழுந்த அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருக்காட்டுப்பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை கேட்ட அவரது பெற்றோர்களும், உறவினர்களும் கதறி அழுதனர்.
இதுபற்றிய புகாரின் பேரில் திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேர்வில் மதிப்பெண் குறைந்து விடும் என்று கல்லூரி மாணவி தற்கொலை செய்த சம்பவம் திருக்காட்டுப் பள்ளி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை அடுத்துள்ள இளங்காடு மேலத்தெருவை சேர்ந்த செந்தமிழ்செல்வன் என்பவர் மகள் மகாராணி (வயது 17). இவர் தனியார் கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு படித்து வந்தார்.
அவர் சமீபத்தில் நடந்த செமஸ்டர் தேர்வை சரியாக எழுதவில்லை. எனவே மதிப்பெண் குறைவாக கிடைக்கும் என்று கவலையில் இருந்து வந்தார். இதில் மனமுடைந்த அவர் நேற்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். மயங்கி விழுந்த அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருக்காட்டுப்பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை கேட்ட அவரது பெற்றோர்களும், உறவினர்களும் கதறி அழுதனர்.
இதுபற்றிய புகாரின் பேரில் திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேர்வில் மதிப்பெண் குறைந்து விடும் என்று கல்லூரி மாணவி தற்கொலை செய்த சம்பவம் திருக்காட்டுப் பள்ளி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X