search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கோட்டை அருகே மர்ம காய்ச்சலுக்கு இளம்பெண் பலி
    X

    புதுக்கோட்டை அருகே மர்ம காய்ச்சலுக்கு இளம்பெண் பலி

    புதுக்கோட்டை அருகே மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி அருகே உள்ள ஏனாதி கிராமத்தை சேர்ந்தவர் காளியம்மாள் (வயது 19). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அங்குள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றார். ஆனால் அவருக்கு காய்ச்சல் குண மாகவில்லை.

    இதையடுத்து மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    காளியம்மாள் எந்த வகை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்பது தெரியவில்லை. இருப்பினும் மர்ம காய்ச்சலுக்கு அவர் பலியான சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×