என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வேலூர் அருகே இளம்பெண் கொலை - தந்தை கிணற்றில் பிணமாக மீட்பு
வேலூர்:
வேலூர் அருகே உள்ள அரப்பாக்கம் மசூதி தெருவை சேர்ந்தவர் நசீர் (வயது 50). பீடி சுற்றும் தொழிலாளி. இவரது மனைவி தமீம் தம்பதிக்கு 3 மகள்கள் ஒருவர் நோய் வாய்பட்டு இறந்துவிட்டார். மூத்த மகள் யாஸ்மின் (25). 2-வது மகள் சில ஆண்டுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். நசீரின் மனைவி தமீம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
இதனால் தந்தையுடன் யாஸ்மின் வசித்து வந்தார். இவர்களது வீட்டில் இருந்த சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ள விவசாய கிணற்றில் இன்று காலை நசீர் பிணமாக மிதந்தார்.
இதனை கண்டு திடுக்கிட்ட பொதுமக்கள் இதுபற்றி அவரது மகளிடம் கூற வீட்டுக்கு சென்றனர். வீட்டுக்கதவு பூட்டப்படாமல் திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தனர்.
அங்கு யாஸ்மின் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார் வீடு முழுவதும் ரத்தமாக காணப்பட்டது. தந்தை-மகள் பிணத்தை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து ரத்தினகிரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
ராணிப்பேட்டை டி.எஸ்.பி. விஜயகுமர், இன்ஸ் பெக்டர்கள் திருநாவுக்கரசு, வெங்கடேசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். அங்கு பதட்டம் நிலவியதால் 25-க்கும் மேற்பட்ட அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டனர்.
ராணிப்பேட்டை தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கபட்டனர். பின்னர் பொதுமக்கள் உதவியுடன் கிணற்றுக்குள் கிடந்த நசீர் உடலை கட்டிலில் கயிறு கட்டி மீட்டனர். மீட்கபட்ட உடலை கிண்ற்றில் அருகே வைத்தனர்.
வேலூரில் இருந்து மோப்ப நாய் சன்னி வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் யாஸ்மின் பிணம் கிடந்த இடத்தில் இருந்து அருகில் உள்ள கிணற்றுக்கு ஓடி சுற்றி சுற்றி வந்தது. இறுதியாக நசீர் உடலருகே சென்று படுத்து கொண்டது.
இதன் மூலம் யாஸ்மீனை நசீர் கொலை செய்து விட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
நசீருக்கு கடந்த 2 ஆண்டுக்கு முன்பு விபத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது தலையில் ஆபரேசன் செய்து கொண்டார். அதிலிருந்து அவரால் சரியாக பேச முடியவில்லை. காலில் முறிவு ஏற்பட்டு சிரமப்பட்டு நடந்தார்.
இதனால் நசீர் மனமுடைந்து காணப்பட்டார். யாஸ்மினுக்கு திருமணம் செய்து வைக்க மாப்பிள்ளை பார்த்து வந்தார். இது சம்பந்தமாக தந்தை-மகள் இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட தகராறில் நசீர் மகளை கொள்ளை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது இருவரும் கொலை செய்யபட்டார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்