என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆர்.கே. நகர் தேர்தல் அதிகாரியை உடனே மாற்ற வேண்டும்: திவாகரன்
Byமாலை மலர்7 Dec 2017 8:17 AM GMT (Updated: 7 Dec 2017 8:17 AM GMT)
ஆர்.கே. நகர் தேர்தல் அதிகாரி வேலுச்சாமியை உடனே மாற்ற வேண்டும் என்பதுதான் எங்களின் நிலை என சசிகலாவின் தம்பி திவாகரன் கூறியுள்ளார்.
திருக்காட்டுப்பள்ளி:
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் நடந்த ஒரு திருமண விழாவில் சசிகலாவின் தம்பி திவாகரன் கலந்து கொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆர்.கே.நகர் தேர்தலில் டி.டிவி தினகரனுக்கு மக்கள் ஆதரவு உள்ளது. தொப்பி சின்னம் மீண்டும் கிடைத்தால் 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவோம்.
தொப்பி சின்னம் கிடைத்தால் தினகரன் வெற்றி பெற்றுவிடுவார் என்று மத்திய உளவு பிரிவு கூறிய தகவலால் அனைவரும் சேர்ந்து தொப்பி சின்னம் வழங்க விடாமல் தடுத்து வருகிறார்கள். தினகரனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
காவிரி பிரச்சனை , நீட் போன்ற பிரச்சனைகளில் மத்திய -மாநில அரசுகள் விரோதமாக உள்ளது. நாகை மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 18 பேர் கடலுக்கு சென்றதில் 3 பேர் நீந்தி வந்துள்ளனர். புயலில் 15 பேர் இறந்து உள்ளனர். புயல் குறித்து எந்த செயல்பாடும் இல்லாத அரசாக உள்ளது. இது குறித்து அரசு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.
ஆர்.கே. நகர் தேர்தலில் தேர்தல் ஆணையம் தனக்கு வேண்டிய எஐமானர்களை வெற்றிபெற எல்லாமும் செய்கிறது. நடிகர் விஷால் விஷயத்தில் அவர் கூறியது கூட உண்மையாக இருக்கலாம். ஆரம்பத்திலேயே குழப்பமாக உள்ளதால் தேர்தல் அதிகாரி வேலுச்சாமியை மாற்ற வேண்டும் என்பதுதான் எங்களின் நிலை.
இவ்வாறு அவர் கூறினார்.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் நடந்த ஒரு திருமண விழாவில் சசிகலாவின் தம்பி திவாகரன் கலந்து கொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆர்.கே.நகர் தேர்தலில் டி.டிவி தினகரனுக்கு மக்கள் ஆதரவு உள்ளது. தொப்பி சின்னம் மீண்டும் கிடைத்தால் 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவோம்.
தொப்பி சின்னம் கிடைத்தால் தினகரன் வெற்றி பெற்றுவிடுவார் என்று மத்திய உளவு பிரிவு கூறிய தகவலால் அனைவரும் சேர்ந்து தொப்பி சின்னம் வழங்க விடாமல் தடுத்து வருகிறார்கள். தினகரனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
காவிரி பிரச்சனை , நீட் போன்ற பிரச்சனைகளில் மத்திய -மாநில அரசுகள் விரோதமாக உள்ளது. நாகை மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 18 பேர் கடலுக்கு சென்றதில் 3 பேர் நீந்தி வந்துள்ளனர். புயலில் 15 பேர் இறந்து உள்ளனர். புயல் குறித்து எந்த செயல்பாடும் இல்லாத அரசாக உள்ளது. இது குறித்து அரசு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.
ஆர்.கே. நகர் தேர்தலில் தேர்தல் ஆணையம் தனக்கு வேண்டிய எஐமானர்களை வெற்றிபெற எல்லாமும் செய்கிறது. நடிகர் விஷால் விஷயத்தில் அவர் கூறியது கூட உண்மையாக இருக்கலாம். ஆரம்பத்திலேயே குழப்பமாக உள்ளதால் தேர்தல் அதிகாரி வேலுச்சாமியை மாற்ற வேண்டும் என்பதுதான் எங்களின் நிலை.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X