search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கள்ளத்தொடர்பை கண்டித்த பெண் சித்ரவதை: கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு
    X

    கள்ளத்தொடர்பை கண்டித்த பெண் சித்ரவதை: கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு

    வாடிப்பட்டியில் கள்ளத்தொடர்பை கண்டித்த பெண்னை சித்ரவதை செய்தது தொடர்பாக பெண் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    மதுரை:

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள சல்லாகுளத்தைச் சேர்ந்தவர் தினேஷ்குமார். இவரது மனைவி சரண்யா (வயது25). இவர் வாடிப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதில் கூறி இருப்பதாவது:-

    எனது கணவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதனை கைவிடுமாறு பலமுறை கண்டித்தேன். ஆனால் அவர் கைவிடவில்லை. மேலும் தொடர்ந்து என்னை சித்ரவதை செய்து வருகிறார்.

    இதற்கு உடந்தையாக அந்த பெண் உள்பட 2 பேர் உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    புகாரின் அடிப்படையில் வாடிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி தினேஷ் குமார், கள்ள தொடர்பு வைத்திருந்த பெண் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    Next Story
    ×