search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒக்கி புயலில் சிக்கி மாயமான புதுவை மீனவர்கள் லட்சத்தீவில் தவிப்பு
    X

    ஒக்கி புயலில் சிக்கி மாயமான புதுவை மீனவர்கள் லட்சத்தீவில் தவிப்பு

    ஒக்கி புயலில் சிக்கி லட்சத்தீவில் தவித்து வரும் புதுவை மீனவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுப்பதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி உறுதி அளித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை மாநிலம் கிருமாம்பாக்கம் அருகே பிள்ளையார் குப்பம் நரம்பை மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் ஆறுமுகம் (வயது 50), மணிகண்டன் பிரபு (23), அருள்ராஜ் (25), கந்தநாதன் (25), ஆனந்து (30) ஆகிய 5 பேரும் கேரளாவில் தங்கி இருந்து மீன்பிடித்து வந்தனர்.

    வழக்கம் போல் கடந்த 1-ந்தேதி கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் தோப்பம்பட்டி துறை முகத்தில்இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    அப்போது ஒக்கி புயலில் சிக்கி இந்த மீனவர்கள் தவித்தனர். அவர்களை பற்றிய தகவல் தெரியாமல் அவர்களது குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கினர்.

    இந்த நிலையில் மீனவர்கள் 5 பேரும் லட்சத்தீவு அருகே இருப்பதாகவும், உணவின்றி தவித்து வருவதாகவும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து 5 மீனவர்களின் குடும்பத்தாரும், நரம்பை கிராம பஞ்சாயத்தாரும் லட்சத்தீவில் தவிப்பவர்களை மீட்க புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு கோரிக்கை விடுத்தனர். அவர் மீனவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

    Next Story
    ×