என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மருதுகணேசுக்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின் 7-ந் தேதி முதல் பிரசாரம்
Byமாலை மலர்3 Dec 2017 5:02 AM GMT (Updated: 3 Dec 2017 5:02 AM GMT)
ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் மருது கணேசை ஆதரித்து வருகிற 7-ந் தேதி முதல் மு.க.ஸ்டாலின் தீவிர பிரசாரம் மேற்கொள்கிறார்.
சென்னை:
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக மருதுகணேஷ் போட்டியிடுகிறார். தி.மு.க. வேட்பாளருக்கு காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி. தமிழ் மாநில தேசிய லீக். பார்வர்டு பிளாக், பெருந்தலைவர் மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
மனுதாக்கல் செய்த நாள் முதல் மருதுகணேஷ் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் நேற்று ஓட்டு கேட்டபோது அவருடன் மாவட்டச் செயலாளர்கள் மாதவரம் சுதர்சனம், ஜெ.அன்பழகன், பி.கே.சேகர் பாபு மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிக் லீக் கட்சியினரும் உடன் சென்று ஓட்டு கேட்டனர்.
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வருகிற 7-ந் தேதி முதல் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுகிறார். அன்றைய தினம் ஆர்.கே. நகரில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடக்கிறது. கூட்டணி கட்சியினருக்கு இதில் மருது கணேசை அறிமுகப்படுத்தி மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.
அதைத் தொடர்ந்து பிரசாரம் தீவிரம் அடைகிறது. மு.க.ஸ்டாலின் மற்றும் தலைவர்கள் வீதி வீதியாக சென்று பிரசாரத்தில் ஈடுபடுகிறார்கள்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக மருதுகணேஷ் போட்டியிடுகிறார். தி.மு.க. வேட்பாளருக்கு காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி. தமிழ் மாநில தேசிய லீக். பார்வர்டு பிளாக், பெருந்தலைவர் மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
மனுதாக்கல் செய்த நாள் முதல் மருதுகணேஷ் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் நேற்று ஓட்டு கேட்டபோது அவருடன் மாவட்டச் செயலாளர்கள் மாதவரம் சுதர்சனம், ஜெ.அன்பழகன், பி.கே.சேகர் பாபு மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிக் லீக் கட்சியினரும் உடன் சென்று ஓட்டு கேட்டனர்.
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வருகிற 7-ந் தேதி முதல் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுகிறார். அன்றைய தினம் ஆர்.கே. நகரில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடக்கிறது. கூட்டணி கட்சியினருக்கு இதில் மருது கணேசை அறிமுகப்படுத்தி மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.
அதைத் தொடர்ந்து பிரசாரம் தீவிரம் அடைகிறது. மு.க.ஸ்டாலின் மற்றும் தலைவர்கள் வீதி வீதியாக சென்று பிரசாரத்தில் ஈடுபடுகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X