என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செங்கல்பட்டில் எடப்பாடி பழனிசாமி - ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் மோதல்
Byமாலை மலர்29 Nov 2017 7:24 AM GMT (Updated: 29 Nov 2017 7:25 AM GMT)
செங்கல்பட்டில் நடந்த அரசு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு, சிங்க பெருமாள் கோவில், திருப்போரூர் ஆகிய பகுதிகளில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
செங்கல்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த இலவச மடிக்கணினி வழங்கும் விழாவில் அமைச்சர் பெஞ்சமின் கலந்து கொண்டார்.
விழாவையொட்டி பள்ளி முன்பு வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் வைத்த பேனரில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்களின் பெயர்கள் இடம் பெறவில்லை.
மேலும் பேனர் வைப்பதிலும் அவர்களிடையே அதிருப்தி இருந்தது. மேடையில் ஓ.பி.எஸ். ஆதரவாளர்களுக்கு பொன்னாடை அணிவிக்காததால் விழா நடந்து கொண்டிருக்கும் போது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
உடனே அமைச்சர் பெஞ்சமின் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினார். இதையடுத்து அவர்கள் அமைதி அடைந்தனர்.
செங்கல்பட்டு, சிங்க பெருமாள் கோவில், திருப்போரூர் ஆகிய பகுதிகளில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
செங்கல்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த இலவச மடிக்கணினி வழங்கும் விழாவில் அமைச்சர் பெஞ்சமின் கலந்து கொண்டார்.
விழாவையொட்டி பள்ளி முன்பு வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் வைத்த பேனரில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்களின் பெயர்கள் இடம் பெறவில்லை.
மேலும் பேனர் வைப்பதிலும் அவர்களிடையே அதிருப்தி இருந்தது. மேடையில் ஓ.பி.எஸ். ஆதரவாளர்களுக்கு பொன்னாடை அணிவிக்காததால் விழா நடந்து கொண்டிருக்கும் போது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
உடனே அமைச்சர் பெஞ்சமின் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினார். இதையடுத்து அவர்கள் அமைதி அடைந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X