என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வடமதுரை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடிகள் தஞ்சம்
வடமதுரை:
வேடசந்தூர் அருகே உள்ள ஜி.நடுப்பட்டியைச் சேர்ந்தவர் நாகலெட்சுமி (வயது 19). ஒட்டன்சத்திரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. வேதியியல் பிரிவில் படித்து வருகிறார். இவரும் உறவினரான தங்கராஜ் (26) என்பவரும் கடந்த 4 வருடங்களாக காதலித்து வருகின்றனர்.
தங்கராஜ் ஐ.டி.ஐ. படித்து முடித்து விட்டு எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வருகிறார். நிரந்தர வேலை இல்லை என்பதால் இவர்களது காதலை நாகலெட்சுமியின் பெற்றோர்கள் எதிர்த்தனர் இதனால் வீட்டை விட்டு வெளியேறிய காதலர்கள் இருவரும் திருமலைக் கேணியில் நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் பாதுகாப்பு கேட்டு வடமதுரை போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். போலீசார் இருவரது பெற்றோரையும் அழைத்து சமாதானம் செய்து வைத்தனர்.
திண்டுக்கல் மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் மஞ்சுளா (25). பட்டதாரி மாணவி. திண்டுக்கல் பாறைப் பட்டியைச் சேர்ந்தவர் தினேஷ் (25). இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்தனர். இதற்கு மஞ்சுளாவின் பெற்றோர் சம்மதிக்கவில்லை.
இதனால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி திண்டுக்கல் மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பாதுகாப்பு கேட்டு வடமதுரை போலீசில் தஞ்சமடைந்தனர். போலீசார் இரு தரப்பு பெற்றோரையும் வரவழைத்து சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்