என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிவகாசியில் காதல் திருமணம் செய்த பெண்ணுக்கு சித்ரவதை: கணவர் உள்பட 4 பேர் மீது புகார்
Byமாலை மலர்25 Nov 2017 11:34 AM GMT (Updated: 25 Nov 2017 11:34 AM GMT)
காதல் திருமணம் செய்த பெண்ணை சித்ரவதை செய்ததாக கணவர் உள்பட 4 பேர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர்:
சிவகாசி பொட்டல் பட்டியை சேர்ந்தவர் ஜான்சிராணி (வயது25). இவர் அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ்பாண்டி என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில் பிரசவத்திற்கு தாய் வீடு சென்ற ஜான்சிராணியை ரமேஷ்பாண்டி வந்து அழைத்து செல்லவில்லை. இதனால் ஜான்சிராணி தானாகவே கணவர் வீடு சென்றார்.
அங்கு அவருக்கு சரியாக சாப்பாடு கொடுக்காமல் கணவர் ரமேஷ் பாண்டி மற்றும் அவரது குடும்பத்தினர் சித்ரவதை செய்ததாக சிவகாசி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஜான்சிராணி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீது விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து சிவகாசி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து ரமேஷ் பாண்டி, அவரது தாயார் காளீஸ்வரி, தம்பிகள் செல்லச்சாமி, பாக்கியராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுளளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X