search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காரின் கதவில் பைக் மோதி விபத்து: வியாபாரி படுகாயம்
    X

    காரின் கதவில் பைக் மோதி விபத்து: வியாபாரி படுகாயம்

    ஆறுமுகநேரி அருகே காரின் கதவை திடீரென திறந்ததால் வியாபாரி ஓட்டி வந்த பைக் மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
    ஆறுமுகநேரி:

    ஏரல் அருகே உள்ள லட்சுமிபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது45). வாழைக்காய் வியாபாரி. இவரது மகன் அரவிந்தன் (21).

    இவர்கள் இருவரும் நேற்று தொழில் தொடர்பாக ஆத்தூருக்கு பைக்கில் சென்றனர். பின்னர் ஊருக்கு திரும்பும் போது ஆத்தூர் பஜாரில் முன்னே நின்றிருந்த ஒரு காரின் டிரைவர் இருக்கை கதவு திடீரென திறக்கப்பட்டுள்ளது. அப்போது வேகமாக வந்த செந்தில்குமாரின் பைக், காரின் கதவில் மோதியது. இதில் படுகாயம் அடைந்த செந்தில்குமார் மயங்கி விழுந்தார்.

    உடனடியாக அவர் தூத்துக்குடி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த விபத்திற்கு காரணமான காரின் உரிமையாளர் சொக்கப்பழக்கரை சீனிவாசன் என்பவர் மீது ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×