search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    படிக்கட்டில் தொங்கி பயணம்: பஸ்சில் இருந்து விழுந்து 10-ம் வகுப்பு மாணவன் பலி
    X

    படிக்கட்டில் தொங்கி பயணம்: பஸ்சில் இருந்து விழுந்து 10-ம் வகுப்பு மாணவன் பலி

    நேற்று மாலை பள்ளி முடிந்து வீடுதிரும்பிய 10-ம் வகுப்பு மாணவன் பஸ் படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்த போது நிலை தடுமாறி பஸ் சக்கரத்தில் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    மாமல்லபுரம்:

    திருக்கழுக்குன்றத்தை அடுத்த முடையூரை சேரந்தவர் ஏழுமலை. இவரதுமகன் சந்துரு (வயது 15).

    திருக்கழுக்குன்றம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று மாலை பள்ளி முடிந்து வீடுதிரும்ப மதுராந்தகம் செல்லும் அரசு பஸ்சில் ஏறினார். கூட்டம் அதிகமாக இருந்ததால் சந்துரு பஸ்சின் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்தார்.

    தத்தலூர் பஸ் நிறுத்தம் அருகே வந்த போது நிலை தடுமாறிய சந்துரு பஸ்சில் இருந்து கீழே விழுந்தார்.

    பஸ்சின் பின்பக்க டயரில் சிக்கிய அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானர்.

    இது குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×