search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உத்தனப்பள்ளி அருகே மினிவேன் மோதி வாலிபர் பலி
    X

    உத்தனப்பள்ளி அருகே மினிவேன் மோதி வாலிபர் பலி

    மோட்டார் சைக்கிள் மீது மினிவேன் மோதியதில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    ராயக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே உள்ள பீர்ஜேபள்ளியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவருடைய மகன் நவீன்குமார் (வயது 24). இவர் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

    சம்பவத்தன்று அலேசீபத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அலேசீபம் மசூதி அருகே சென்றபோது ராயக்கோட்டையில் இருந்து உத்தனப்பள்ளி நோக்கி வந்த மினிவேன் நவீன்குமார் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×