search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிணறு தோண்டும்போது மண் சரிந்து சிக்கிய 2 பேர் உயிருடன் மீட்பு
    X

    கிணறு தோண்டும்போது மண் சரிந்து சிக்கிய 2 பேர் உயிருடன் மீட்பு

    சாயல்குடி அருகே கிணறு தோண்டும்போது மண் சரிந்து சிக்கிய 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
    சாயல்குடி:

    சாயல்குடி அருகே உள்ள வெல்லபட்டியை சேர்ந்தவர் சண்முகராஜ் (வயது 42). இவருடைய உறவினர் மாரிக்கனி (37). இவர்கள் 2 பேரும் சண்முகராஜ் வீட்டில் கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது 15 அடி ஆழத்தில் தோண்டிக் கொண்டு இருந்தபோது திடீரென மண் சரிந்து அவர்கள் மீது விழுந்தது. கழுத்து பகுதி வரை மண் மூடிய நிலையில் 2 பேரும் உயிருக்கு போராடிய நிலையில் சத்தம் போட்டுள்ளனர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் தகவல் அறிந்து தீயணைப்பு நிலைய அலுவலர் லிங்கம் தலைமையில் தீயணைப்புபடை வீரர்கள் விரைந்து வந்து மண்ணை அகற்றி அவர்கள் 2 பேரையும் உயிருடன் மீட்டு சிகிச்சைக்காக சாயல்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர். சாயல்குடி போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
    Next Story
    ×