என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொள்ளாச்சி அருகே என்ஜினீயரிங் மாணவர் மின்சாரம் தாக்கி பலி
Byமாலை மலர்23 Nov 2017 12:18 PM GMT (Updated: 23 Nov 2017 12:18 PM GMT)
யூ.பி.எஸ்.சை எடுத்து தள்ளி வைக்க முயன்ற போது மின்சாரம் தாக்கியதில் என்ஜினீயரிங் மாணவர் பரிதாபமாக இறந்தார்.
கோவை:
பொள்ளாச்சி சின்னயம் பாளையத்தை சேர்ந்தவர் ஷேசாத்ரி(வயது 57) வேன் டிரைவர். இவரது மகன் சந்திரமோகன்(22) அப்பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் வீட்டை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். யூ.பி.எஸ்.சை எடுத்து தள்ளி வைக்க முயன்ற போது எதிர்பாராதவிதமாக இவர் மீது மின்சாரம் தாக்கியது.
இதில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார். சத்தம் கேட்டு குடும்பத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் சந்திரமோகனை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
புகாரின்பேரில் மகாலிங்கபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சந்திரமோகன் ஈரக்கையுடன் யூ.பி.எஸ்.சை தொட்டதாகவும், அப்போது மின்சாரம் தாக்கியதாகவும் கூறப்பபடுகிறது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி சின்னயம் பாளையத்தை சேர்ந்தவர் ஷேசாத்ரி(வயது 57) வேன் டிரைவர். இவரது மகன் சந்திரமோகன்(22) அப்பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் வீட்டை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். யூ.பி.எஸ்.சை எடுத்து தள்ளி வைக்க முயன்ற போது எதிர்பாராதவிதமாக இவர் மீது மின்சாரம் தாக்கியது.
இதில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார். சத்தம் கேட்டு குடும்பத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் சந்திரமோகனை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
புகாரின்பேரில் மகாலிங்கபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சந்திரமோகன் ஈரக்கையுடன் யூ.பி.எஸ்.சை தொட்டதாகவும், அப்போது மின்சாரம் தாக்கியதாகவும் கூறப்பபடுகிறது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X