search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கல்விக்கடன் வழங்காததால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்: ப. சிதம்பரம்
    X

    கல்விக்கடன் வழங்காததால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்: ப. சிதம்பரம்

    மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு கல்விக்கடன் வழங்காததால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ப. சிதம்பரம் தெரிவித்தார்.
    சிவகங்கை:

    முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் சிவகங்கையில் இன்று திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியதாவது:-

    காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மாணவர்களுக்கு கல்விக் கடன் ஏராளமாக வழங்கியது.

    இதனால் கிராமப்புற மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் படித்தனர். அவர்கள் இன்று பல்வேறு வேலை வாய்ப்புகளை பெற்றுள்ளனர். சிலர் தொழில் தொடங்கி உள்ளனர்.


    ஆனால் தற்போதைய மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு கல்விக்கடன் எதுவும் வழங்கவில்லை.

    இதனால் ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் கல்விக்கடன் கிடைக்காது என்ற எண்ணத்தில் மேல்படிப்பு படிக்க தயங்குகின்றனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×