என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜெயலலிதா மரணம்: அரசு மருத்துவர்கள் 2 பேர் விசாரணை ஆணையத்தில் ஆஜர்
Byமாலை மலர்23 Nov 2017 5:18 AM GMT (Updated: 23 Nov 2017 8:32 AM GMT)
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் அரசு மருத்துவர்கள் இரண்டு பேர் இன்று ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
சென்னை:
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. நீதிபதி ஆறுமுகசாமி நேற்று தனது நேரடி விசாரணையை தொடங்கினார்.
முதன்முதலாக பிரமாண பத்திரம் அளித்த டாக்டர் சரவணன் நேற்று ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். ஜெ.தீபா, சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் கிருஷ்ணமூர்த்தி, டிராபிக் ராமசாமி ஆகியோரும் ஆணையத்தில் மனுக்களை அளித்தனர்.
இதன்பின்பு நீதிபதி ஆறுமுகசாமி நிருபர்களிடம் கூறுகையில், 2 அரசு மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்பி உள்ளதாகவும், அவர்கள் 23-ந் தேதி (இன்று) காலை 10.30 மணிக்கு ஆஜராக அறிவுறுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார்.
அதன்படி, மருத்துவ கல்வி முன்னாள் இயக்குநர் விமலா, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் முதல்வர் நாராயண பாபு ஆகியோர் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜராகினர்.
அப்போது நீதிபதி ஆறுமுகசாமி கேட்ட கேள்விகளுக்கு இருவரும் விளக்கம் அளித்தனர்.
இதேபோல் திமுகவை சேர்ந்த மருத்துவர் சரவணன் இன்று மீண்டும் ஆஜராகி சில ஆவணங்களை வழங்கினார்.
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. நீதிபதி ஆறுமுகசாமி நேற்று தனது நேரடி விசாரணையை தொடங்கினார்.
முதன்முதலாக பிரமாண பத்திரம் அளித்த டாக்டர் சரவணன் நேற்று ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். ஜெ.தீபா, சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் கிருஷ்ணமூர்த்தி, டிராபிக் ராமசாமி ஆகியோரும் ஆணையத்தில் மனுக்களை அளித்தனர்.
இதன்பின்பு நீதிபதி ஆறுமுகசாமி நிருபர்களிடம் கூறுகையில், 2 அரசு மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்பி உள்ளதாகவும், அவர்கள் 23-ந் தேதி (இன்று) காலை 10.30 மணிக்கு ஆஜராக அறிவுறுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார்.
அதன்படி, மருத்துவ கல்வி முன்னாள் இயக்குநர் விமலா, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் முதல்வர் நாராயண பாபு ஆகியோர் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜராகினர்.
அப்போது நீதிபதி ஆறுமுகசாமி கேட்ட கேள்விகளுக்கு இருவரும் விளக்கம் அளித்தனர்.
இதேபோல் திமுகவை சேர்ந்த மருத்துவர் சரவணன் இன்று மீண்டும் ஆஜராகி சில ஆவணங்களை வழங்கினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X