search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.ஏ.எஸ். தேர்வில் காப்பி அடித்த விவகாரம்: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு ஜாமீன்
    X

    ஐ.ஏ.எஸ். தேர்வில் காப்பி அடித்த விவகாரம்: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு ஜாமீன்

    ஐ.ஏ.எஸ். தேர்வில் காப்பி அடித்த விவகாரத்தில் கைதான ஐ.பி.எஸ். அதிகாரி தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி சபீர்கரீமுக்கு ஜாமீன் வழங்கினார்.
    சென்னை:

    சென்னையில் நடந்த ஐ.ஏ.எஸ். பணிக்கான முதன்மை தேர்வில் காப்பி அடித்த நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த ஐ.பி.எஸ். அதிகாரியான சபீர்கரீம் கைது செய்யப்பட்டார். தேர்வில் காப்பி அடிக்க உதவியாக இருந்ததாக அவரது மனைவி ஜாய்சி, நண்பர் ராம்பாபு ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

    இதைதொடர்ந்து சபீர்கரீம் ஜாமீன் கேட்டு சென்னை செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், தேர்வு மையத்துக்குள் புளுடூத் எடுத்துச் செல்லவில்லை என்றும், உள்நோக்கத்துடன் தன்னை சிலர் சிக்க வைத்துவிட்டதாகவும் கூறியிருந்தார். இந்த மனு நேற்று நீதிபதி சுபாதேவி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரித்த நீதிபதி, ஐ.பி.எஸ். அதிகாரி சபீர்கரீமுக்கு ஜாமீன் வழங்கினார்.


    Next Story
    ×