என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போக்குவரத்து துறையில் உள்ள கடனை அடைக்க செயல்திட்டம்: விஜயகாந்த் வலியுறுத்தல்
Byமாலை மலர்23 Nov 2017 1:48 AM GMT (Updated: 23 Nov 2017 1:48 AM GMT)
போக்குவரத்து துறையில் உள்ள ரூ.18 ஆயிரம் கோடி கடனை அடைக்க உடனே தமிழக அரசு செயல் திட்டம் தீட்டவேண்டும் என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை:
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு கட்டுப்பாட்டில் உள்ள போக்குவரத்து துறைக்கு சுமார் ரூ.18 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் உள்ளது. இந்த கடனுக்காக ஆண்டுதோறும் ரூ.600 கோடிக்கும் மேல் வட்டிக்கட்டும் அவல நிலையில் போக்குவரத்து துறை உள்ளது. அதுமட்டுமல்லாமல் பணம் பற்றாக்குறையால் பஸ்களுக்கு உதிரிபாகங்கள் வாங்குவதற்காக 325 பணிமனைகளில் சுமார் 286 பணிமனைகளும், பெரும்பாலான அரசு பஸ்களும் அடமானம் வைக்கப்பட்டுள்ளது. எனவே நஷ்டத்தில் இயங்கும் போக்குவரத்து துறையை வல்லுனர் குழுவின் மூலம் ஆய்வு செய்யவேண்டும்.
இவ்வாறு செய்யப்படும் ஆய்வின் மூலம் கிடைக்கும் நஷ்டத்துக்கான காரணத்தை அறிந்து போக்குவரத்து துறையில் உள்ள ரூ.18 ஆயிரம் கோடி கடனை அடைக்க உடனே தமிழக அரசு செயல் திட்டம் தீட்டவேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு கட்டுப்பாட்டில் உள்ள போக்குவரத்து துறைக்கு சுமார் ரூ.18 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் உள்ளது. இந்த கடனுக்காக ஆண்டுதோறும் ரூ.600 கோடிக்கும் மேல் வட்டிக்கட்டும் அவல நிலையில் போக்குவரத்து துறை உள்ளது. அதுமட்டுமல்லாமல் பணம் பற்றாக்குறையால் பஸ்களுக்கு உதிரிபாகங்கள் வாங்குவதற்காக 325 பணிமனைகளில் சுமார் 286 பணிமனைகளும், பெரும்பாலான அரசு பஸ்களும் அடமானம் வைக்கப்பட்டுள்ளது. எனவே நஷ்டத்தில் இயங்கும் போக்குவரத்து துறையை வல்லுனர் குழுவின் மூலம் ஆய்வு செய்யவேண்டும்.
இவ்வாறு செய்யப்படும் ஆய்வின் மூலம் கிடைக்கும் நஷ்டத்துக்கான காரணத்தை அறிந்து போக்குவரத்து துறையில் உள்ள ரூ.18 ஆயிரம் கோடி கடனை அடைக்க உடனே தமிழக அரசு செயல் திட்டம் தீட்டவேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X